×

கனிமொழி குறித்து அவதூறு பாஜக மூத்த உறுப்பினர் கைது

 

திருச்சி, பிப்.10: திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த பாஜக மூத்த உறுப்பினரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் 2வது வட்ட திமுக செயலாளர் வக்கீல் ஹரிஹரன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். புகாரில், உறையூர் திருத்தாந்தோணி சாலை சத்யாநகரைச் சேர்ந்த சீனிவாசன்(66) என்பவர், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மீது சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் சீனிவாசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்ட கோர்ட், சீனிவாசனை சொந்த ஜாமினில் செல்ல அனுமதி வழங்கியது. சீனிவாசன் பாஜக மாவட்ட செயற்குழு மூத்த உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கனிமொழி குறித்து அவதூறு பாஜக மூத்த உறுப்பினர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Trichy ,Dimuka ,Deputy General Secretary ,Kanimozhi ,Trichy Srirangam ,2nd District Secretary ,
× RELATED நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் கைது